மறைந்த இலங்கைக்கான குவைத் தூதுவர் அப்துல்லாஹ் நாஸர் அல்-ஸனூஸி அவர்களுக்கான அனுதாபம் தெரிவித்தல் சம்மந்தமாக….!

Date:

இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் அளப்பரிய சேவைகளை செய்த முன்னாள் இலங்கைக்கான குவைத் தூதுவர் அப்துல்லாஹ் நாஸர் அல்-ஸனூஸி காலமானதையடுத்து கொழும்பிலுள்ள குவைத் தூதரகத்தில் திங்கள் முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அவருக்கான அனுதாபம் தெரிவிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள குவைத் தூதுவரகம் தெரிவித்துள்ளது.

தூதுரகத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் பதிவேட்டில் இலங்கை மக்கள் சார்பாக அனுதாபத்தை தெரிவிக்க விரும்புவோர் கொழும்பிலுள்ள பௌத்தலோக்க மாவத்தையிலுள்ள குவைத் தூதரகத்தில் தனது அனுதாபங்களை தெரிவிக்க முடியம்.

காலம்சென்ற குவைத் தூதுவர் அப்துல்லாஹ் நாஸர் அல்-ஸனூஸி இலங்கையில் (2002-2005) வரை தூதுவராக பணியாற்றினார்.

இந்நிலையில், அவர் கடந்த 01 ஆம் திகதி புதன்கிழமை காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://tamil.newsnow.lk/2022/06/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b5/

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...