லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்!

Date:

வீட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், லிட்ரோ எரிவாயு விலையை உயர்த்தவில்லை என நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முதித பீரிஸ் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

அடுத்த நான்கு மாதங்களுக்கு ஓமானில் உள்ள நீண்ட கால விநியோகஸ்தரிடம் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேநேரம், முதலில் தாய்லாந்தில் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்த முதித பீரிஸ், விநியோகஸ்தர் 6000 மெட்ரிக் தொன் எரிவாயுவிற்கு மட்டுமே விலையை குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ஓமானில் உள்ள விநியோகஸ்தர் தாய்லாந்தின் விநியோகஸ்தரை விட சற்றே அதிக விலையை மேற்கோள் காட்டியுள்ளார்.

ஆனால் குறைந்தபட்சம் 100,000 மெட்ரிக் தொன் எரிவாயு ஆர்டருக்கு, அவர்கள் 03 முதல் 04 மாதங்களுக்கு எரிவாயுவை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

இலங்கையின் தற்போதைய எரிவாயு தேவையை கருத்தில் கொண்டு ஓமானில் உள்ள விநியோகஸ்தரிடம் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...