வடக்கு- கிழக்கில் உள்ள வன நிலங்கள் பயிர்ச்செய்கைக்காக கொடுக்கப்பட்டுள்ளன!

Date:

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வன திணைக்களத்தின் கீழ் உள்ள வயல் நிலங்களை மீண்டும் விவசாய மக்களுக்கு வழங்க விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதி, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வன திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வயல் நிலங்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் கமநல ஆணையாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்தார்.

வனப்பாதுகாப்பிற்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளை இம்முறை மற்றும் எதிர்வரும் பருவ காலத்தில் விவசாயம் செய்யக்கூடிய வகையில் விவசாயிகளுக்கு வழங்குவதை துரிதப்படுத்துமாறும் அமைச்சர் மஹிந்த அமரவீர கமநல அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...