வேலையற்ற தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இலவச தொழிற்பயிற்சி: அமைச்சர் மனுஷ

Date:

உலகளாவிய தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு இலங்கை தொழிலாளர்களின்  பிள்ளைகளுக்கு இலவச தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இன்று (20) காலை அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் உள்ள ‘ஷ்ரம வாசனா’ நிதியத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தொழிற் பயிற்சிகளை வழங்குவதற்கான செலவை ‘ஷ்ரம வாசனா’ நிதியத்தினால் ஏற்க வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ‘ஷ்ரம வாசனா’ நிதியத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பில் உழைக்கும் மக்களின் நலன் குறித்து அமைச்சர் மனுஷ நாணயக்கார விசேட கவனம் செலுத்தினார்.

இதேவேளை, தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சின் தலையீட்டுடன் சுதந்திர வர்த்தக வலயங்களை மையமாகக் கொண்டு தொடர் நடமாடும் சேவைகளை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு மேலும் பணிப்புரை விடுத்தார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...