அனைவரும் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டும்: ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் உரை!

Date:

புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது வேட்பாளர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு நன்றி தெரிவித்ததுடன், புதிய முறையில் ஒன்றிணைந்து செயற்படுமாறு பாராளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தினார்.

‘மக்கள் பழைய அரசியலை எங்களிடம் கேட்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப்பெற்று உரையாற்றினார்.

கடந்த 48 மணிநேரமாக நாங்கள் பிரிக்கப்பட்டோம். அந்தக் காலம் இப்போது முடிந்துவிட்டது. நாம் இப்போது ஒன்றாக வேலை செய்ய வேண்டும், என்று அவர் மேலும் கூறினார்.

எதிர்கால திட்டங்கள் தொடர்பில் நாளைய தினம் இவர்களுடன் சந்திப்பொன்று நடத்தப்படும். நாம் அனைவரும் பிரிந்து செயல்படும் காலம் முடிந்து விட்டது.

இனிமேல் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தாம் 45 வருடங்களை பாராளுமன்றத்தில் கழித்துள்ளதாகவும் தனது வாழ்க்கை பாராளுமன்றத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, நாடாளுமன்றம் தனக்கு வழங்கிய இந்த மரியாதைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மேலும் தமக்கு வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

“நாட்டின் இளைஞர்கள் இன்று இந்த அமைப்பில் மாற்றத்தைக் கோருகின்றனர். வெளிநாட்டில் இன்று உலகில் பல பிரச்சினைகள் உள்ளன. இதில் ஈடுபடாமல் போக வேண்டும். தொடரவும். நாம் ஒரு புதிய திட்டத்தை உருவாக்க வேண்டும்.

அதேபோன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும் அந்தக் கட்சியின் சார்பில் இதே கோரிக்கையை முன்வைக்க வேண்டும். அதேபோன்று இங்கு வந்துள்ள எமது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் இதே கோரிக்கையை முன்வைக்கின்றேன்.

 

Popular

More like this
Related

புத்தளம் மாவட்ட வெள்ளத் தடுப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக சீனப் பொறியியலாளர்கள் விசேட கலந்துரையாடல்.

அண்மையில் டிட்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்...

அனுஷ பெல்பிட்டவுக்கு விளக்கமறியல்!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்ட அமைச்சின் முன்னாள்  செயலாளரும்...

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு லண்டன் குரோலி அல் ஹுதா பள்ளிவாசலினால் நிதியுதவி

லண்டனில் குரோலி (Crawley) பகுதியில் அமைந்துள்ள அல் ஹுதா பள்ளிவாசலுக்கு  'முஸ்லிம்...

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பில் முன்னாள் சபாநாயகர் ஜனாதிபதிக்கு கடிதம்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பில், முன்னாள் சபாநாயகர் கரு...