அவசரகாலச் சட்டம்: ‘ஜெனிவா அமர்வில் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்’

Date:

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகள் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது என அதன் ஸ்தாபகத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அது இலங்கைக்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும், அது ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இழக்கவும் வழிவகுக்கும் என்றும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய நிலவரப்படி மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க தற்போதுள்ள பொதுச் சட்டமே போதுமானது எனவும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...

டயானா கமகேவுக்கு நீதிமன்றம் பிடியாணை

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

எதிர்வரும் நாட்களில் வானிலையில் மாற்றம்!

எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் மாலை...