ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அரச பாடசாலை பேருந்து சேவை!

Date:

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி, முதல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக புதிய பஸ் சேவை அறிமுகப்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் மேல் மாகாணத்தை இலக்கு வைத்து இந்த பஸ் சேவை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், அதற்காக சுமார் நாற்பது பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்  திலன் மிராண்டா தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களிடம் இருந்து சாதாரண பஸ் கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.

இந்தப் பேருந்தின் ஆரம்பப் புள்ளி மற்றும் செல்லும் இடங்கள் குறித்த துண்டுப் பிரசுரத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பான தகவல்களை 1955 என்ற தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...