‘கோட்டாபய சிங்கப்பூர் சென்று தனது இராஜினாமா கடிதத்தை அனுப்புவார்’

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இதுவரை பயண இலக்கை அடையாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், குறித்த இராஜினாமா கடிதம் இன்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலைதீவுக்கு தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூர் செல்லத் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சென்ற பிறகு அவர்  பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சமர்பிப்பார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...