இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது!

Date:

அண்மைய எரிபொருள் விலை குறைப்புக்கு அமைவாக இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை 2.23 வீதத்தால் குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி, இதுவரை குறைந்தபட்ச கட்டணம் ரூ. 40 குறைந்து ரூ.38 ஆக இருக்கும்.

இந்த விலை அதிகரிப்பு தனியார் பஸ்கள் மற்றும் இலங்கை பஸ்களுக்கும் பொருந்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண சேவைகள், அரை சொகுசு சேவைகள், சொகுசு சேவைகள் மற்றும் அதி சொகுசு சேவைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் இந்த விலை திருத்தம் பொருந்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தேசிய போக்குவரத்து சபை வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் அறிவித்துள்ளதாக நிலான் மிராண்டா தெரிவித்தார்.

பேருந்துக் கட்டணக் குறைப்பு வழங்கப்படாவிட்டால் பொதுமக்கள் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். 1955 இலக்கத்திற்கு அழைப்பெடுக்கலாம். 24 மணி நேரமும் திறந்திருக்கும்.

அதேபோல், இந்த பஸ் கட்டண வசூலை கண்காணிக்க,  அதிகாரிகள் முடிந்தவரை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

QR குறியீட்டை பழைய பயனர்கள் தடையின்றிப் புதுப்பித்துக் கொள்ளலாம்!

ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் தற்போதும் அதே வாகனம்...

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...