இன்று முதல் சுகாதார ஊழியர்களுக்கு பிரத்தியேக எரிபொருள் விநியோக ஏற்பாடுகள்!

Date:

சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரத்தியேக எரிபொருள் விநியோக ஏற்பாடுகளை இன்று முதல் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில்சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா விடுத்துள்ள கடிதத்தில் கடந்த இரண்டு வாரங்களாக அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை வெற்றியடையச் செய்வதற்கு வழங்கப்பட்ட பாரிய ஆதரவின் அடிப்படையில் மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் வழங்கல் வரம்பு மற்றும் நிரப்பு நிலையங்களின் பிரத்தியேக பட்டியல் அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது .

இதன்படி, மோட்டார் வாகனத்திற்கு 20 லீற்றரும், முச்சக்கரவண்டிக்கு எட்டு லீற்றரும், மோட்டார் சைக்கிள்களுக்கு ஆறு லீற்றரும் அருகில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்படும்.

Popular

More like this
Related

புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு நிவாரண உதவிகளை வழங்க துருக்கி இணக்கம்.

இலங்கைக்கான  துருக்கி தூதுவர் கலாநிதி செமிஹ் லுட்ஃபு துர்குட் (Semih Lütfü...

நிலவும் வரண்ட வானிலை நாளை முதல் மாற்றமடையும்

நாட்டில் தற்போது நிலவும் வரண்ட வானிலை நாளை (23) வெள்ளிக்கிழமையிலிருந்து மாற்றமடையும் என...

கல்வி மறுசீரமைப்புகளின்போது பல்கலைக்கழக நிபுணர்களைக் கொண்ட பொறிமுறை நிறுவப்படும்: ஜனாதிபதி

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிபுணர்கள்...

பெப்ரவரி 04 முதல் 11 வரை புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு...