இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து அமெரிக்க தூதுவருடன் ஜனாதிபதி சந்தித்து பேச்சு!

Date:

‘பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் இந்த கட்டத்தில்  எவ்வாறு வந்தது மற்றும் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்க ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்’ என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜூலி இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அவரது செயலகத்தில் சந்தித்துள்ளார்.

இதன்போது ‘எமது நாடுகளும் எமது மக்களும் 70 வருடங்களுக்கும் மேலாக நண்பர்களாகவும் பங்காளிகளாகவும் உள்ளனர்.

நல்லாட்சியை ஏற்றுக்கொள்ளும், மனித உரிமைகளை மதிக்கும் மற்றும் அதன் மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்கும் இலங்கையில் உறவுகள் மலர்ந்திருக்கும்’ என்று ஜூலி  சுங் கூறினார்.

ரணில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் இருவரும் சந்திப்பொன்றை பகிர்ந்து கொள்வது இது இரண்டாவது தடவையாகும்.

Popular

More like this
Related

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் மூன்று இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தொரு (365,951)...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...