இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து அமெரிக்க தூதுவருடன் ஜனாதிபதி சந்தித்து பேச்சு!

Date:

‘பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் இந்த கட்டத்தில்  எவ்வாறு வந்தது மற்றும் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்க ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்’ என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜூலி இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அவரது செயலகத்தில் சந்தித்துள்ளார்.

இதன்போது ‘எமது நாடுகளும் எமது மக்களும் 70 வருடங்களுக்கும் மேலாக நண்பர்களாகவும் பங்காளிகளாகவும் உள்ளனர்.

நல்லாட்சியை ஏற்றுக்கொள்ளும், மனித உரிமைகளை மதிக்கும் மற்றும் அதன் மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்கும் இலங்கையில் உறவுகள் மலர்ந்திருக்கும்’ என்று ஜூலி  சுங் கூறினார்.

ரணில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் இருவரும் சந்திப்பொன்றை பகிர்ந்து கொள்வது இது இரண்டாவது தடவையாகும்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...