ஊடகவியலாளர்களை தாக்கிய குழுவுக்கு எதிராக விசாரணை!

Date:

பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களம் வருத்தம் தெரிவிப்பதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்

அந்த குழுவினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் தனிப்பட்ட வாசஸ்தலத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றைப் பதிவு செய்யச் சென்ற நான்கு சிரச ஊடகவியலாளர்கள் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டதோடு, பெண் ஊடகவியலாளர் ஒருவர் உட்பட நால்வர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குழுவொன்று இந்த தாக்குதலை நடத்தியதாக தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணி...

வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது!

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை, மறு அறிவிப்பு வரும்...

மன்னார், இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பாதிக்கப்பட்ட 157 பேரை கடற்படையினர் மீட்டனர்

மன்னாரின் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட...

GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை...