ஊடகவியலாளர்களை தாக்கிய விசேட அதிரடிப்படையின் அதிகாரி பணி இடைநீக்கம்!

Date:

தனியார் ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய விசேட அதிரடிப்படையின் எஸ்.எஸ்.பி அதிகாரி ரொமேஷ் லியனகே பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இன்று பொலிஸ் தலைமையகத்தின் ஊடக அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தை தெரிவிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே உடனடியாக பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபருக்கு நிறுவன சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைவாகவும், பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டுவும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்தப் பணியிடம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

சிறப்பு அதிரடிப் படையின் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவின் இயக்குநராகப் பணியாற்றினார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...