எரிபொருள் கிடைக்காவிட்டால், மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவை நிறுத்தப்படும்!

Date:

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று (25ஆம் திகதி) மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்துகளின் சேவை  வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். மாகாணங்களுக்கிடையிலான சுமார் 3000 தனியார் பேருந்துகள் தமது நாளாந்த பயணங்களை இரத்து செய்ய வேண்டியுள்ளதாக மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் சுமார் 3200 மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்துகள் ஒழுங்குபடுத்தப்படுவதாகவும், ஆனால் இன்று (25) சுமார் 300 பேருந்துகள் மட்டுமே இயங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் ஊடாக டீசல் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் அந்த ஏற்பாடு வெற்றியளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கிடையிலான பஸ்களுக்கு டீசல் வழங்கும் முறையான வேலைத்திட்டத்தை இந்த வாரத்திற்குள் அரசாங்கம் நடைமுறைப்படுத்தாவிட்டால் அனைத்து பஸ்களும் சேவையில் இருந்து விலகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பிற்கு உள்ளேயும் வெளியேயும் மாகாண பஸ் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

எனினும், நேற்றைய தினம் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் மூன்று இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தொரு (365,951)...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...