எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக “1990 சுவசெரிய” அம்பியூலன்ஸ் சேவை பாதிப்பு!

Date:

இலவச அம்பியூலன்ஸ் சேவையான “1990 சுவசெரிய” அம்பியூலன்ஸ் சேவையானது, நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்களுக்கு பதிலளிப்பதில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

அதேநேரம், குறிப்பிட்ட 13-20 நிமிடங்களுக்குள் இந்த சேவை அவசரநிலைகளை பூர்த்தி செய்ய முடியாது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக காலதாமதம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது எனவும் அதனை நிவர்த்தி செய்வது தமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது எனவும் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.

“1990 சுவசெரிய” அம்பியூலன்ஸ்கள் வாகன விபத்துக்கள், அவசர சிகிச்சை மற்றும் பெரிய சுகாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...