கதிர்காமம் பாத யாத்திரை செல்பவர்களுக்கு கடற்படையால் வசதிகள்!

Date:

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் பாத யாத்திரையில் பங்குகொள்ளும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை கடற்படையினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அதற்கமைய தேசிய வனப் பூங்காவின் நுழைவு வாயிலில் இருந்து கும்புக்கன் ஓயா செல்லும் வழியில் தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படுகின்றன.

கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பணிப்புரையின் பேரில் தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெருமவின் மேற்பார்வையில் இந்தப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

குமண தேசிய வனப் பூங்காவின் நுழைவு வாயிலில் இருந்து கும்புக்கன் ஓயா வரை தென்கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை ஊழியர்கள் இணைந்து தேவையான மருத்துவ வசதிகள், உயிர்காக்கும் சேவைகள் மற்றும் பிற வசதிகளை வழங்குகின்றனர்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...