கதிர்காமம் பாத யாத்திரை செல்பவர்களுக்கு கடற்படையால் வசதிகள்!

Date:

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் பாத யாத்திரையில் பங்குகொள்ளும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை கடற்படையினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அதற்கமைய தேசிய வனப் பூங்காவின் நுழைவு வாயிலில் இருந்து கும்புக்கன் ஓயா செல்லும் வழியில் தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படுகின்றன.

கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பணிப்புரையின் பேரில் தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெருமவின் மேற்பார்வையில் இந்தப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

குமண தேசிய வனப் பூங்காவின் நுழைவு வாயிலில் இருந்து கும்புக்கன் ஓயா வரை தென்கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை ஊழியர்கள் இணைந்து தேவையான மருத்துவ வசதிகள், உயிர்காக்கும் சேவைகள் மற்றும் பிற வசதிகளை வழங்குகின்றனர்.

Popular

More like this
Related

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...