கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

Date:

கல்முனை மாநகரில் சமையல் எரிவாயு விநியோகத்தில் அரசியல் தலையீடுகள் இருப்பதனால் முறைகேடுகள் இடம்பெறுவதுடன் மக்கள் பிரதிநிதிகள் தலையிட்டு அவர்களின் ஆதரவாளர்களுக்கு மற்றும் குடும்பத்தினருக்கு வழங்கி வருகின்றனர். இதனால் தேவையுடைய மக்களாகிய எங்களுக்கு கிடைப்பதில் இடர்பாடுகள் இருக்கிறது என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கல்முனை மாநகர பிரதேசங்களில் பிரதேச செயலகத்தையும் தாண்டி கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் பலர் தலையிட்டு சமையல் எரிபொருளுக்கான டோக்கன்களை வழங்கி அவர்களுக்கு சமையல் எரிவாயுவை பெற்றுக்கொடுக்கின்றனர்.

இந்த வாய்ப்பானது அவர்கள் கட்சி சார்ந்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது. அதிலும் சிலர் தனது நெருங்கிய குடும்பத்தினர், தீவிர ஆதரவாளர்களுக்கு முன்னுரிமை வழங்கி பங்கிடுவதனால் பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு கிடைப்பதில் சிக்கல்கள் நிலவுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் கல்முனை பிரதேச செயலாளர் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லாமல் பொறுப்புவாய்ந்த அரச அதிகாரியாக செயற்பட்டு தேவையுடைய மக்களுக்கு கிராம நிலைதாரிகள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போன்றோர்களை பயன்படுத்தி ஒழுங்கான முறையில் சகலருக்கும் கிடைக்கும் வண்ணம் சமையல் எரிவாயுவை பெற்றுக்கொடுக்க ஆவண செய்யுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

 

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...