குண்டு தாக்குதல் தொடர்பான கடிதம்: பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

Date:

குண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படும் புலனாய்வுத் தகவல் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருக்கு பொலிஸ் மா அதிபர் அனுப்பிய கடிதம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய இம்மாதம் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் கறுப்பு ஜூலைரய முன்னிட்டு நடத்தப்படக் கூடிய பயங்கரவாதத் தாக்குதலின் வெளிப்பாடு, புலனாய்வு வட்டாரங்கள் மூலம் கிடைத்த உறுதிப்படுத்தப்படாத தகவலின் அடிப்படையில் கவனத்தில் கொள்ளப்பட்டது.

மேலும், இவை சரிபார்க்கப்படாத புலனாய்வுத் தகவல்கள் மற்றும் ‘கறுப்பு ஜூலை’யைத் தூண்டும் இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்வதற்குத் தொடர்புபடுத்தும் எந்த அடிப்படைத் தகவலும் இல்லை.

மேலும், இவ்வாறான தாக்குதல் பயங்கரவாத குழுக்களால் மேற்கொள்ளப்படலாம் எனவும், அரசாங்கத்திற்கு எதிரான குழுக்கள் அரசாங்கத்தை இழிவுபடுத்துவதற்கும், ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதற்கும் வன்முறையைத் தூண்டலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதால், பெறப்பட்ட உளவுத்துறையின் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் அதே வேளையில் உயர்தர பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும், தமது அன்றாடப் பணிகளைத் தொடருமாறும் பாதுகாப்பு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...