‘கொவிட்’ அறிகுறி உள்ள குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்பாதீர்கள்’: தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம்!

Date:

‘கொவிட்’ நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ‘கொவிட்’ தடுப்பூசியைப் பெறுவதில் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்பு ‘கொவிட்’ தடுப்பு ஊசி போடப்பட்ட பகுதிகள், வட்டார சுகாதார மருத்துவர் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு மக்கள் வந்து செல்கின்றனர்.

இன்று (27) காலை முதல் கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் உள்ள இராணுவத்தினரால் நடத்தப்படும் ‘கொவிட்’ தடுப்பூசி மையத்திற்கு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள பெருமளவிலான மக்கள் வருகைத் தந்தனர்.

இதேவேளை ‘கொவிட்’ அறிகுறிகளைக் காட்டும் குழந்தைகளை பாடசாலைகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டாம் என குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

சில காலத்தின் பின்னர் பாடசாலைகள் திறக்கப்படுவதால், அதனைத் தொடர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், அனைவருக்கும் ‘கொவிட்’ பரிசோதனை செய்யப்படாது என்றும் நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட...

உலக மனிதநேய தினம்: மனிதாபிமானத்தை முதன்மையாகக் கருதும் சவூதி அரேபியா – இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

எழுத்து: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆகஸ்ட்...

சமூக சேவை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம்

2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில்...

நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...