ஜனாதிபதியினால் மூவரடங்கிய குழு நியமனம்!

Date:

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுத்த கோரிக்கைக்கு அமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மூவரடங்கிய விசாரணைக் குழுவை நியமித்துள்ளார்.

அமைச்சரவை அமைச்சர் ஒருவர், ஜப்பானின் தயிஸே நிறுவனத்திடம் கையூட்டல் கோரியதாக, சமூக வலைத்தளங்கள் உட்பட அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, நாடாளுமன்றில் குறிப்பிடப்பட்ட விடயத்தை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீது எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியதுடன், அது குறித்து விசாரணை நடத்துமாறும், ஜனாதிபதியிடம் கோரியிருந்தார்.

இதற்கமைய, நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய குழுவிடம், இந்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...