ஜனாதிபதியின் வீட்டில் எடுக்கப்பட்ட ரூ.17.8 மில்லியன் பணத்தை ஒப்படைக்குமாறு கோட்டை நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு!

Date:

ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்து எடுக்கப்பட்ட 17.8 மில்லியன் ரூபா பணத்தை ஜூலை 9 ஆம் திகதி ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதவான் உத்தரவு பிறப்பித்த போது, மூன்று வாரங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பொலிஸாரிடம் பணம் கையளிக்கப்பட்ட போதிலும் நீதிமன்றில் அறிக்கையோ பணமோ சமர்ப்பிக்கப்படவில்லை என நீதவான் திலின கமகே தெரிவித்தார்.

எனவே, அறிக்கை மற்றும் பணம் இரண்டையும் ஒப்படைக்குமாறு கோட்டை பொலிஸாருக்கு கமகே உத்தரவிட்டார்.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...