ஜனாதிபதி பதவி விலக வேண்டும்: கட்சித் தலைவர்கள் தீர்மானம்

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியல் கட்சிகளின் கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமானது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சித் தலைவர்கள் பதவி விலகுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதையடுத்து சபாநாயகர் இன்று மாலை கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தை பொதுமக்கள் ஆக்கிரமித்துள்ள போதிலும், ஜனாதிபதியின் இருப்பிடம் தெரியவில்லை.

இலங்கை அரசியல் வரலாற்றில் பதவி விலகும் முதல் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ திகழ்கிறார். அதேவேளை, பிரதமர் ரணிலுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், பதில் ஜனாதிபதியாக சபாநாயகர் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Popular

More like this
Related

வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது!

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை, மறு அறிவிப்பு வரும்...

மன்னார், இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பாதிக்கப்பட்ட 157 பேரை கடற்படையினர் மீட்டனர்

மன்னாரின் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட...

GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை...

வென்னப்புவவில் உயிரிழந்த விமானி தொடர்பில் இலங்கை விமானப்படை இரங்கல்

வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட போது உயிரிழந்த...