கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து திருடப்பட்ட பழங்காலத்து பொருட்கள் சிலவற்றை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூலை 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போது, சந்தேக நபர்கள் ஜன்னல் திரைகளை தொங்கவிடுவதற்காக சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த 40 தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை பாதங்களை திருடிச் சென்றதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூவரும் இராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தில் வசிக்கும் 28, 34 மற்றும் 37 வயதுடைய போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.