ஜூலை 25ம் திகதி விசேடடெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனம்: அசேல குணவர்தன!

Date:

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 43,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகளளின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதத்தில் மாத்திரம் 8,000 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்நிலை நீடித்தால் டெங்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆய்வுகளின்படி அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், கட்டுமானத் தளங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பொது இடங்கள் ஆகியவை டெங்கு பெருக்கத்திற்கு அதிக வாய்ப்புள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவ்வாறான அனைத்து காரணிகளையும் கருத்திற்க் கொண்டு, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஜூலை 25ஆம் திகதி திங்கட்கிழமை விசேட டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் நிறுவனங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் டெங்கு பரவும் இடங்களை கண்டறிந்து அழிக்கவும், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கவும், டெங்கு ஒழிப்புக்கு பொறுப்பான அதிகாரியின் கீழ் குழுவை நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health...

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது...

சர்வதேச மோதல்களின் தாக்கம்: சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதை...

சில மாவட்டங்களுக்கு மழையுடனான வானிலை!

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவு மழை...