‘தாய் நாட்டை வழிநடத்த நாங்கள் தயார்’ :சஜித்

Date:

நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கவும் கட்டியெழுப்பவும் தாய்நாட்டிற்கு தலைமைத்துவத்தை வழங்க தயார் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தின் ஆணை முடிந்து விட்டதாகவும், நாட்டை அழித்து முடித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு தலைமைத்துவத்தை வழங்குவதை தவிர வேறு தீர்வு இல்லை என சஜித் பிரேமதாச குறிப்பிட்டிருந்தார்.

பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆணை முடிந்து விட்டது. அவர்கள் அனைவரும் சேர்ந்து இந்த அழகிய தாய் நாட்டை அழிப்பார்கள்.

நாட்டை ஸ்திரப்படுத்தவும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு தலைமைத்துவத்தை வழங்கவும் எதிர்க்கட்சியில் உள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

இதைத் தவிர மாற்றுத் தீர்வு இல்லை. இதை எதிர்க்கும் நாடாளுமன்றத்தில் யாரேனும் நாசகார செயலை செய்தால் அதை தேசத்துரோகமாக பார்க்கிறோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தாய்நாட்டைப் பாதுகாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தாய்நாட்டிற்கு தலைமையை கொடுங்கள்.நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம்.

தாய்நாடு வெல்லட்டும், மக்கள் வெல்லட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...