பாராளுமன்ற நுழைவாயில், காலி முகத்திடலில் பாதுகாப்பு!

Date:

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்புக்கு முன்னதாக, காலி முகத்திடலில் உள்ள “கோட்ட கோ கம” மற்றும் பாராளுமன்றத்தின் அனைத்து நுழைவாயில்களிலும் ஆயுதம் ஏந்திய மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பெருமளவானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, நாடாளுமன்ற வளாகம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளின் பாதுகாப்பிற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, உளவுத்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

வெற்றிடமாகவுள்ள ஜனாதிபதி பதவிக்கு வாரிசை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.

Popular

More like this
Related

7வது ஆண்டாக மத நல்லிணக்கத்தை பறைசாற்றிய கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபதனாராம விகாரையின் இப்தார் நிகழ்வு!

இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பறைசாற்றும் வகையில், கொழும்பு கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபதனாராம...

நல்லிணக்கம், சகவாழ்வு கலாசாரத்தை நோக்கிய தேசிய இளைஞர் இப்தார் நிகழ்வு

சமூகத்தின் பிரதான அங்கமாக இருக்கின்ற இளைஞர்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்பும்...

புதிய வக்ஃப் சபை நியமனம்: அவசரகால நியமனங்களைத் தவிர்த்து நடுநிலையான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

புதிய வக்ஃப் சபை அமைக்கப்படவுள்ள சூழலில், அதன் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள்...

‘MOTHER LANKA’ பெயரில் புதிய டிஜிட்டல் தளம் அறிமுகம்

‘MOTHER LANKA’ என்ற பெயரில் புதிய டிஜிட்டல் தளமொன்றை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,...