பேருவளை கெச்சிமலை தர்கா ஷரீப் அவர்களின் மறைவுக்கு ஜம்இய்யத்துல் உலமா அனுதாபம்!

Date:

பேருவளை கெச்சிமலை தர்கா ஷரீப் அஷ்ஷைக் காலிப் அலவி பின் அஷ்ஷைக் முஹம்மத் அப்துல்லாஹ் (அலவியத்துல் காதிரி) (றஹ்மத்துல்லாஹி அலைஹி) (93) அவர்கள் இன்று இன்று காலமானார்.

அவரது மறைவுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனுதாபம் தெரிவித்துள்ளது.

அஷ்ஷைக் ஹம்ஸா பின் அப்துல்லாஹ் ஆலிம் (அலவியத்துல் காதிரி) மற்றும் அஷ்ஷைக் ஷுஐப் பின் அப்துல்லாஹ் ஆலிம் (அலவியத்துல் காதிரி) ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் அலவிய்யத்துல் காதிரிய்யா தரீக்காவையும், கெச்சிமலையில் நடைபெறும் புகாரி, முஸ்லிம் மஜ்லிஸையும் கடந்த 16 வருடங்களாக தலைமை தாங்கி நடாத்திய சிறப்புக்குரியவர்.

முஸ்லிம் சமூகத்தை ஆன்மீக ரீதியாக வழிகாட்டுவதில் அன்னாரின் பங்களிப்பு பாரியதொன்றாகும்.

அன்னாரின் மகன் அஷ்ஷைக் கே.எம். ஸகீ அஹ்மத் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் ஒருவராவார்.

இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், முஹிப்பீன்கள், முரீதீன்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து உலமாக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...