போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்!

Date:

உலக வர்த்தக மையத்திற்கு அருகில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.

நாளைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களனி பல்கலைக்கழகத்தில் இருந்து இன்று மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியிருந்தனர்.

இவர்கள் கொழும்பு கோட்டை பகுதியில் உலக வர்த்தக மைய கட்டடத்தொகுதிக்கு அருகில் உள்ள வீதித் தடையை உடைத்துக்கொண்டு முன்னால் செல்ல முயன்ற போது அவர்கள் மீது நீர்த்தாரை தாக்குதல் மற்றும் கண்ணீர் புகைத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதால் பதற்றநிலைமை உருவாகியுள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...