போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பொலிஸ் சார்ஜன்ட் கூரிய ஆயுதத்துடன் கைது!

Date:

மஹரகம நகரில் இடம்பெற்ற போராட்டத்திற்கு ஆதரவளித்த பொலிஸ் சார்ஜன்ட் இன்று (11) அதிகாலை ஜனாதிபதி மாளிகைக்குள் கூரிய ஆயுதத்துடன் செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

ஹோமாகம மாகம்மன பிரதேசத்தை சேர்ந்த நாரஹேன்பிட்டி பொலிஸ் கரேஜில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய சார்ஜன்ட் வசம் 2 அங்குல அகலமும் 10 அங்குல நீளமும் கொண்ட கத்தி கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் சீருடையில் செருப்பு அணிந்திருந்த சந்தேக நபர் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய வந்ததையடுத்து, அவருக்குப் பாதுகாப்பில் இருந்த இராணுவ அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம், சந்தேக நபரை அவருக்குப் பாதுகாப்பில் இருந்த பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்ததையடுத்து, பொலிஸாரின் கைத்தொலைபேசி அந்த இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட், கடந்த தினம் மஹரகம நகரில் போராட்டத்திற்காக பேரணியாக சென்ற இளைஞர்கள் குழுவிற்கு ஆதரவாக செயற்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...