மக்கள் போராட்டத்திற்கு 100 நாட்கள்: சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு

Date:

காலி முகத்திடலில் ‘கோட்டா கோ கம’ மக்கள் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் 100 நாட்கள் பூர்த்தியாகின்றன.

இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதியை நீக்க முடிந்தமை மக்கள் போராட்டத்தின் முதல் வெற்றி என போராட்டத்தின் செயற்பாட்டாளர் ஜிவந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதேபோல, போராட்டத்தின் செயல்திட்டம் அமுல்படுத்தப்படும் வரை போராட்டம் முன்னெடுக்கப்படும் என அருட்தந்தை ஜிவந்த பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் தற்போதைய அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி ஏப்ரல் 9ஆம் திகதி இந்த மக்கள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் கலைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார்கள், சிவில் அமைப்புக்கள், உட்பட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

நேற்று (ஜூலை 16) போராட்டத்திற்காக உயிர் தியாகம் செய்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் போராட்ட களத்தில் சிறப்பு கொண்டாட்ட விழா நடைபெற்றது.

போராட்டம் 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு இன்று (ஜூலை 17) சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...