மே 9 இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிக்கை!

Date:

கடந்த மே மாதம் (9) காலிமுகத்திடல் ‘கோட்டா கோ’ கிராமத்தின் மீது கடமை தவறிய பொலிஸ் மா அதிபர் உட்பட விசாரணை நடத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்த விசாரணைக்குப் பிறகு, சம்பவத்தில் தாக்கப்பட்டு காயமடைந்தவர்களை அடையாளம் கண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க பொலிஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனித ஆணையத்தின் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில், சம்பவ இடத்தில் கடமையாற்றிய பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களினால் கடமை மீறல் இடம்பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சம்பவத்தன்று குழுவினர் அளித்த வாக்குமூலங்களை முறையாக வெளியிடவில்லை என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட செயல்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் தவறிவிட்டனர் எனவும் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...