ரயில் நிலைய அதிபர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது!

Date:

நேற்று (ஜூலை 23) மாலை 6:00 மணிக்கு ரயில் நிலையங்களில்  டிக்கெட் வழங்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகியதன் மூலம் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நிலைய அதிபர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இன்று (ஜூலை 24) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில்வே கட்டண திருத்தத்தில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படாததால் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை அவர்கள் தொடங்கியுள்ளனர்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கையானது 48 மணித்தியாலங்களுக்கு அமுல்படுத்தப்படும் எனவும், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின், அன்றிலிருந்து தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தொழிற்சங்கம் தெரிவித்திருந்தது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...