‘ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல, நான் மக்களின் நண்பன்’: ஜனாதிபதி ரணில்

Date:

நான் ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல, நான் மக்களின் நண்பன், என்று இலங்கையின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘ஸ்கை’ நியூஸ்’ என்ற ஊடகமொன்று ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் குடும்பத்தின் பழைய நண்பர் எனக் கூறியதை ரணில் ரணில் கேலி செய்துள்ளார்.

‘ஸ்கை நியூஸ்’ ஊடகவியலாளர் விக்கிரமசிங்கவை ராஜபக்ஷவின் பழைய நண்பர் என்று குறிப்பிட்டபோது, அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, தான் எப்போதும் ராஜபக்ஷக்களை எதிர்ப்பதாக குறிப்பிட்டார்.

மேலும், எந்தவொரு நபரையும் நேர்காணல் செய்வதற்கு முன்னர் ஆழமான விசாரணையை மேற்கொள்ளுமாறும் ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

மற்றுமொரு கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, மக்கள் கோரிய மாற்றத்தை வழங்குவதாக தெரிவித்தார்.

Popular

More like this
Related

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு காலம் நீடிப்பு!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக...

சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நாளை திறக்கப்படும்

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03)...

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும்

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026...

சி.பி. ரத்நாயக்க இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழு...