ராஜபக்ஷ நிழல் அரசாங்கம் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது: சஜித் கடும் கண்டனம்!

Date:

நிராயுதபாணியான போராட்டக்காரர்கள் மீது ராஜபக்ஷ நிழல் அரசாங்கம் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

தாக்குதலுக்கு உத்தரவிட்டது மற்றும் திட்டமிட்டது யார் என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பெண்கள், அங்கவீனமுற்ற இராணுவத்தினர் என பலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதனை எதிர்க்கட்சியினர் கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.

இத்தாக்குதல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தி அதற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தாக்குதல் தொடர்பான பொறுப்பில் இருந்து ஜனாதிபதி விலகிச் செல்ல முடியாது என்றும் அரச அனுசரணையுடன் வன்முறைக்கு உத்தரவு பிறப்பித்தது யார் எனவும் கேள்வி எழுப்பினார்.

Popular

More like this
Related

ஐரோப்பிய வாகன இறக்குமதிக்கு 25% வரி; டிரம்ப் அறிவிப்பு

வர்த்தக ஒப்பந்தங்களில் முழுமையான உடன்பாடு எட்டப்படாததால், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்...

ஹஜ் யாத்திரையை முன்னிட்டு முதலாவது குழு சவூதி பயணம்!

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரையை முன்னிட்டு, 325 யாத்திரிகர்களைக் கொண்ட...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...