ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அரச பாடசாலை பேருந்து சேவை!

Date:

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி, முதல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக புதிய பஸ் சேவை அறிமுகப்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் மேல் மாகாணத்தை இலக்கு வைத்து இந்த பஸ் சேவை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், அதற்காக சுமார் நாற்பது பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்  திலன் மிராண்டா தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களிடம் இருந்து சாதாரண பஸ் கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.

இந்தப் பேருந்தின் ஆரம்பப் புள்ளி மற்றும் செல்லும் இடங்கள் குறித்த துண்டுப் பிரசுரத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பான தகவல்களை 1955 என்ற தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

40 வருட முன்பள்ளி சேவையின்பின் பெளசுல் ரூசி சனூன் ஆசிரியை ஓய்வு பெற்றார்.

-புத்தளம் எம்.யூ.எம்.சனூன் புத்தளம் நகரின் சிரேஷ்ட முன்பள்ளி ஆசிரியை எம்.எஸ்.எப்.பௌசுல் ரூஸி சனூன்...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும்...

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...