ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அரச பாடசாலை பேருந்து சேவை!

Date:

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி, முதல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக புதிய பஸ் சேவை அறிமுகப்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் மேல் மாகாணத்தை இலக்கு வைத்து இந்த பஸ் சேவை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், அதற்காக சுமார் நாற்பது பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்  திலன் மிராண்டா தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களிடம் இருந்து சாதாரண பஸ் கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.

இந்தப் பேருந்தின் ஆரம்பப் புள்ளி மற்றும் செல்லும் இடங்கள் குறித்த துண்டுப் பிரசுரத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பான தகவல்களை 1955 என்ற தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஐரோப்பிய வாகன இறக்குமதிக்கு 25% வரி; டிரம்ப் அறிவிப்பு

வர்த்தக ஒப்பந்தங்களில் முழுமையான உடன்பாடு எட்டப்படாததால், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்...

ஹஜ் யாத்திரையை முன்னிட்டு முதலாவது குழு சவூதி பயணம்!

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரையை முன்னிட்டு, 325 யாத்திரிகர்களைக் கொண்ட...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...