ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அரச பாடசாலை பேருந்து சேவை!

Date:

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி, முதல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக புதிய பஸ் சேவை அறிமுகப்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் மேல் மாகாணத்தை இலக்கு வைத்து இந்த பஸ் சேவை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், அதற்காக சுமார் நாற்பது பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்  திலன் மிராண்டா தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களிடம் இருந்து சாதாரண பஸ் கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.

இந்தப் பேருந்தின் ஆரம்பப் புள்ளி மற்றும் செல்லும் இடங்கள் குறித்த துண்டுப் பிரசுரத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பான தகவல்களை 1955 என்ற தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...