இந்தியாவின் 15ஆவது குடியரசு தலைவர் தேர்தல்: இன்று வாக்குப்பதிவு

Date:

இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.

இதில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் பங்கேற்கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு மற்றும் அனைத்து எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்கள்.

பாராளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாநிலங்களின் சட்டமன்றங்கள் மற்றும் டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வாக்களிப்பர்.

அனைத்து மாநிலத்தின் சட்டமன்றத்திலும், டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் தேர்தல் நடைபெற உள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும்.எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்கள் விருப்பப்படி வாக்களிக்கலாம்.

எந்த கட்சிக்கும் வாக்காளர்களை நிர்பந்திக்க உரிமையில்லை. தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கால அட்டவணையின்படி ஜூலை 21ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

ஜூலை 25ஆம் திகதி புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பார். அதற்கு முன்னதாக ஜூலை 24ஆம் திகதி ராம்நாத் கோவிந்த் தனது பதவியை இராஜினாமா செய்வார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...