இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது!

Date:

அண்மைய எரிபொருள் விலை குறைப்புக்கு அமைவாக இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை 2.23 வீதத்தால் குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி, இதுவரை குறைந்தபட்ச கட்டணம் ரூ. 40 குறைந்து ரூ.38 ஆக இருக்கும்.

இந்த விலை அதிகரிப்பு தனியார் பஸ்கள் மற்றும் இலங்கை பஸ்களுக்கும் பொருந்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண சேவைகள், அரை சொகுசு சேவைகள், சொகுசு சேவைகள் மற்றும் அதி சொகுசு சேவைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் இந்த விலை திருத்தம் பொருந்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தேசிய போக்குவரத்து சபை வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் அறிவித்துள்ளதாக நிலான் மிராண்டா தெரிவித்தார்.

பேருந்துக் கட்டணக் குறைப்பு வழங்கப்படாவிட்டால் பொதுமக்கள் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். 1955 இலக்கத்திற்கு அழைப்பெடுக்கலாம். 24 மணி நேரமும் திறந்திருக்கும்.

அதேபோல், இந்த பஸ் கட்டண வசூலை கண்காணிக்க,  அதிகாரிகள் முடிந்தவரை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...