இன்று முதல் கொழும்பிற்கு எரிவாயு விநியோகம்: இன்று நாட்டுக்கு மற்றுமொரு எரிவாயு கப்பல்!

Date:

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்நாட்டு திரவ பெட்ரோலிய எரிவாயு விநியோகம் ஜூலை 11 திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகிறது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று முதல் இந்த விலை அமலுக்கு வருகிறது. புதிய விலை இப்போது 4910ரூபாவாகும்.

மேலும், மற்ற பகுதிகளுக்கு ஜூலை 13ஆம் திகதி எரிவாயு விநியோகம் செய்யப்படும்.

இதேவேளை பொதுமக்கள் சிலிண்டர்களை பதுக்கி வைப்பதில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில் லிட்ரோ நிறுவனம், தனது வாடிக்கையாளர்களை மே மாதத்திற்கான மின்சார கட்டண பத்திரத்தை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

3,700 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்ட கப்பல் நேற்று  வந்தடைந்தது. அதன்படி நேற்று பிற்பகல் முதல் எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணி...

வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது!

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை, மறு அறிவிப்பு வரும்...

மன்னார், இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பாதிக்கப்பட்ட 157 பேரை கடற்படையினர் மீட்டனர்

மன்னாரின் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட...

GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை...