இன்று முதல் கொழும்பிற்கு எரிவாயு விநியோகம்: இன்று நாட்டுக்கு மற்றுமொரு எரிவாயு கப்பல்!

Date:

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்நாட்டு திரவ பெட்ரோலிய எரிவாயு விநியோகம் ஜூலை 11 திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகிறது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று முதல் இந்த விலை அமலுக்கு வருகிறது. புதிய விலை இப்போது 4910ரூபாவாகும்.

மேலும், மற்ற பகுதிகளுக்கு ஜூலை 13ஆம் திகதி எரிவாயு விநியோகம் செய்யப்படும்.

இதேவேளை பொதுமக்கள் சிலிண்டர்களை பதுக்கி வைப்பதில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில் லிட்ரோ நிறுவனம், தனது வாடிக்கையாளர்களை மே மாதத்திற்கான மின்சார கட்டண பத்திரத்தை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

3,700 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்ட கப்பல் நேற்று  வந்தடைந்தது. அதன்படி நேற்று பிற்பகல் முதல் எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...