இன்று முதல் சுகாதார ஊழியர்களுக்கு பிரத்தியேக எரிபொருள் விநியோக ஏற்பாடுகள்!

Date:

சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரத்தியேக எரிபொருள் விநியோக ஏற்பாடுகளை இன்று முதல் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில்சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா விடுத்துள்ள கடிதத்தில் கடந்த இரண்டு வாரங்களாக அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை வெற்றியடையச் செய்வதற்கு வழங்கப்பட்ட பாரிய ஆதரவின் அடிப்படையில் மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் வழங்கல் வரம்பு மற்றும் நிரப்பு நிலையங்களின் பிரத்தியேக பட்டியல் அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது .

இதன்படி, மோட்டார் வாகனத்திற்கு 20 லீற்றரும், முச்சக்கரவண்டிக்கு எட்டு லீற்றரும், மோட்டார் சைக்கிள்களுக்கு ஆறு லீற்றரும் அருகில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்படும்.

Popular

More like this
Related

பொதுமக்களைப் பீதியடையச் செய்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான...

புத்தளத்தில் நிவாரணப் பணிக்கான மையமொன்றினை நிறுவ ஏன் தாமதம்?

நாட்டின் பல பகுதிகளில் சமீபத்திய புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணி...

வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது!

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை, மறு அறிவிப்பு வரும்...