இரகசிய வாக்குப்பதிவு ஆரம்பம்: சபாநாயகர் முதல் வாக்கை பதிவு செய்தார்!

Date:

இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் இன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

வாக்குச் சீட்டு இரகசிய வாக்கெடுப்பு என்பதால் அதனை காட்சிப்படுத்துவது அல்லது புகைப்படம் எடுப்பது குற்றமாகும் என்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் பிரிவு மணியை பாரம்பரியமாக ஐந்து நிமிடம் அடித்த பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்குப்பதிவு தொடங்கும் முன் காலியான வாக்கு பெட்டி எம்.பி.க்களுக்கு காண்பிக்கப்பட்டது.   வாக்குப்பெட்டிகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

Popular

More like this
Related

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் உதவி

இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிவரும் பாகிஸ்தான் விமானங்களுக்கு தனது...

நூல் வெளியீட்டு விழா ஒத்திவைப்பு

பஹன பப்ளிகேஷனின் 5வது வெளியீடாக வரும் “முஸ்லிம்களின் தேசத்துக்கான பங்களிப்புக்கள்” (අභිමානවත්...

வட மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை.

இன்றையதினம் (02) நாட்டின் வட மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள்...

பொதுமக்களைப் பீதியடையச் செய்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான...