‘இலங்கைக்கு ஜப்பான் உதவிகளை வழங்காது’ என்ற செய்தியை ஜப்பான் தூதரகம் மறுத்துள்ளது!

Date:

ஜப்பான் தூதரகம் இலங்கைக்கு உதவவில்லை என்ற செய்தியை மறுத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இலங்கைக்கு நிதியுதவி வழங்கினால் முறைகேடாக நிர்வகித்துவிடலாம் என அஞ்சும் ஜப்பான் இலங்கைக்கு உதவாது’ என பிரபல தனியார் செய்தி நாளிதழ் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது ஜப்பான் தூதுவர் இதனைத் தெரிவித்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தச் செய்திக் கட்டுரையில் எந்த ஆதாரமும் இல்லை, எங்கள் தூதுவர் ஒருபோதும் அப்படிச் சொல்லமாட்டார்’ என்று ஜப்பானிய தூதரகம் ஊடக நிறுவனத்திற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஜப்பான் துதுவர் ஹிடேக்கி மிசுகோஷி இன்று ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்ம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தி தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாக ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...