இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்!

Date:

இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 8ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இரகசிய வாக்கெடுப்பின் பின்னர் ஜூலை 20 புதன்கிழமை அன்று இலங்கை நாடாளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்டார்.

இதன்போது, ரணில்; 134 வாக்குகள் பெற்றார். அவருடன் போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமாரை 82 வாக்குகள் பெற்றார்.

ஜூலை 15ஆம் திகதி இராஜினாமா செய்த கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிடத்துக்கு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...