ஈராக் பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்!

Date:

ஈராக், பாக்தாத் நகரில் அமைந்துள்ள  உயர் பாதுகாப்பு வலயத்தை உடைத்து நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ஈராக் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.

பிரதமர் பதவிக்கு போட்டி வேட்பாளரை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மதகுரு முக்தாதா அல் சதரின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஒக்டோபரில் நடந்த பொதுத் தேர்தலில் அல் சதரின் அரசியல் கூட்டணி அதிக இடங்களை வென்றது, ஆனால் வாக்கெடுப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நடைமுறைக்கு வரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கும் வகையில் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பாடியும் நடனமாடியவாறும் காணப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈராக் நாட்டின் தற்போதைய பிரதமர் முஸ்தபா அல்-காதிமி, போராட்டக்காரர்களை கட்டிடத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார்.

ஒக்டோபர் தேர்தல் முடிந்து 9 மாதங்கள் கடந்துள்ள போதிலும், ஈராக் புதிய அரசாங்கத்தை அமைக்கத் தவறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈராக்கில் அமெரிக்க தலையீட்டை எதிர்த்த ஷியா மதகுருவான சதர், தேர்தலுக்குப் பிறகு தனது தேசியவாத செரோவுன் இயக்கத்திற்கு வெற்றியை அறிவித்தார்.

எவ்வாறாயினும், சதர் தனது போட்டியாளர்களுடன் இணைந்து பணியாற்ற மறுத்ததால், புதிய ஆளும் கூட்டணியை உருவாக்க முடியவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Popular

More like this
Related

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று...

2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பரில் பாராளுமன்றத்திற்கு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில்...

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...