ஈராக் பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்!

Date:

ஈராக், பாக்தாத் நகரில் அமைந்துள்ள  உயர் பாதுகாப்பு வலயத்தை உடைத்து நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ஈராக் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.

பிரதமர் பதவிக்கு போட்டி வேட்பாளரை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மதகுரு முக்தாதா அல் சதரின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஒக்டோபரில் நடந்த பொதுத் தேர்தலில் அல் சதரின் அரசியல் கூட்டணி அதிக இடங்களை வென்றது, ஆனால் வாக்கெடுப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நடைமுறைக்கு வரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கும் வகையில் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பாடியும் நடனமாடியவாறும் காணப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈராக் நாட்டின் தற்போதைய பிரதமர் முஸ்தபா அல்-காதிமி, போராட்டக்காரர்களை கட்டிடத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார்.

ஒக்டோபர் தேர்தல் முடிந்து 9 மாதங்கள் கடந்துள்ள போதிலும், ஈராக் புதிய அரசாங்கத்தை அமைக்கத் தவறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈராக்கில் அமெரிக்க தலையீட்டை எதிர்த்த ஷியா மதகுருவான சதர், தேர்தலுக்குப் பிறகு தனது தேசியவாத செரோவுன் இயக்கத்திற்கு வெற்றியை அறிவித்தார்.

எவ்வாறாயினும், சதர் தனது போட்டியாளர்களுடன் இணைந்து பணியாற்ற மறுத்ததால், புதிய ஆளும் கூட்டணியை உருவாக்க முடியவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...