ஊடகவியலாளர்களை தாக்கிய குழுவுக்கு எதிராக விசாரணை!

Date:

பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களம் வருத்தம் தெரிவிப்பதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்

அந்த குழுவினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் தனிப்பட்ட வாசஸ்தலத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றைப் பதிவு செய்யச் சென்ற நான்கு சிரச ஊடகவியலாளர்கள் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டதோடு, பெண் ஊடகவியலாளர் ஒருவர் உட்பட நால்வர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குழுவொன்று இந்த தாக்குதலை நடத்தியதாக தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...