எதிர்காலத் திட்டம் இல்லை என்றால் ஏனைய நாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்வது கடினம்: சஜித் பிரேமதாச!

Date:

எதிர்காலத் திட்டம் இல்லை என்றால், இலங்கையினால் ஏனைய நாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்வது கடினம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கட்டார் தொண்டு நிறுவனத்திடம் இருந்து உதவிகளை நிராகரித்து கொழும்பு அலுவலகத்தின் செயற்பாட்டுக்கு தடை விதித்தவர்கள் இன்று அவர்களின் உதவியை நாடியுள்ளதாக கூறினார்.

எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய, அதே அமைப்பின் மீதான தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.

கட்டார் அபிவிருத்தி நிதிய அலுவலகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டபோது அன்று வீடமைப்பு அமைச்சராக இருந்த தன்னை எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் விமர்சித்ததாக கூறினார்.

ஆனால் இன்று அந்த நிதியை பெற்றுக்கொள்ள அதே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது பிச்சை பாத்திரத்தை கட்டாருக்கு எடுத்துச் செல்வதாக சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.

அவர்களிடம் பிச்சை எடுக்கத் தொடங்கிய பின்னர், கட்டார் அரசாங்கம் மீதான கருத்துக்களும் சில கட்டுப்பாடுகளும் ஒரே இரவில் மாறிவிட்டதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...