எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாட சவூதி அரேபியாவிற்கு செல்லும் விசேட தூதுவர்!

Date:

(File Photo)

இரு நாடுகளுடனான எரிசக்தி ஒத்துழைப்புக்கான வழிவகைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சவூதி அரேபியாவிற்கு விசேட தூதுவரை அனுப்பவுள்ளார்.

அதற்கமைய சுற்றாடல் துறை அமைச்சர் நசீர் அஹமட் ஜூலை 02 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்த விஜயத்தின் விபரம் தொடர்பாக ஏ.ஐ. சவூதி அரேபியாவின் தூதரகத்தின் அப்துல்லாஹ் ஏ.ஏ.ஓர்கோபி, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை வெளிவிவகார அமைச்சில் சந்தித்தார்.

இந்தச்சந்திப்பில், வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், தற்போதைய பொருளாதார நிலை, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் இலங்கையின் அனைத்து துறைகளிலும் எள்ள அதன் எதிர்மறையான தாக்கம் உள்ளிட்டவை குறித்து விளக்கினார்.

மேலும், சவூதி அரேபிய இராச்சியத்துடன் ஆற்றல் ஒத்துழைப்புக்கான வழிகளை மிகவும் அவசரமான விடயமாகத் தேடியதுடன் இலங்கையின் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் 2022 ஜூலை 02 – 05 வரை சவூதி அரேபியாவிற்கு ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவராக விஜயம் செய்வதற்கு வசதியாக இருந்தார்.

இதேவேளை  சவூதி தூதரகத்தின் ஓர்கோபி, இலங்கை – சவூதி இருதரப்பு உறவுக்கு இணைக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், இத்தருணத்தில் இலங்கைக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் தருவதாக உறுதியளித்தார்.

Popular

More like this
Related

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...