எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக “1990 சுவசெரிய” அம்பியூலன்ஸ் சேவை பாதிப்பு!

Date:

இலவச அம்பியூலன்ஸ் சேவையான “1990 சுவசெரிய” அம்பியூலன்ஸ் சேவையானது, நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்களுக்கு பதிலளிப்பதில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

அதேநேரம், குறிப்பிட்ட 13-20 நிமிடங்களுக்குள் இந்த சேவை அவசரநிலைகளை பூர்த்தி செய்ய முடியாது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக காலதாமதம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது எனவும் அதனை நிவர்த்தி செய்வது தமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது எனவும் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.

“1990 சுவசெரிய” அம்பியூலன்ஸ்கள் வாகன விபத்துக்கள், அவசர சிகிச்சை மற்றும் பெரிய சுகாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...