எரிபொருள் விநியோகம் தொடர்பாக கலந்துரையாட இரண்டு ரஷ்ய பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை!

Date:

(file Photo)
இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இருவரும் பஹரேன் முதல் கல்ஃப் எயர் விமான சேவை ஜீ.எப்.- 144ரக விமானத்தில்  இன்று காலை 9.00 மணியளவில்  வந்தடைந்ததாக சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவின் மொஸ்கோவிற்கும் இலங்கையின் கட்டுநாயக்கவிற்கும் இடையிலான சர்வதேச நேரடி விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், இந்த பிரதிநிதிகள் பஹ்ரைன் ஊடாக கட்டுநாயக்கவிற்கு வந்திருந்தனர்.

இந்த இரு அதிகாரிகளை வரவேற்க தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலைய சிறப்பு விருந்தினர் அறைக்கு வந்திருந்தனர்.

கோட்டாபய ராஜபக்ச, தொலைபேசி உரையாடலில், எரிபொருள் இறக்குமதியை எளிதாக்குவதற்கான கடன் உதவியை ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் தனிப்பட்ட முறையில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...