எரிபொருள் விநியோகம் தொடர்பாக கலந்துரையாட இரண்டு ரஷ்ய பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை!

Date:

(file Photo)
இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இருவரும் பஹரேன் முதல் கல்ஃப் எயர் விமான சேவை ஜீ.எப்.- 144ரக விமானத்தில்  இன்று காலை 9.00 மணியளவில்  வந்தடைந்ததாக சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவின் மொஸ்கோவிற்கும் இலங்கையின் கட்டுநாயக்கவிற்கும் இடையிலான சர்வதேச நேரடி விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், இந்த பிரதிநிதிகள் பஹ்ரைன் ஊடாக கட்டுநாயக்கவிற்கு வந்திருந்தனர்.

இந்த இரு அதிகாரிகளை வரவேற்க தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலைய சிறப்பு விருந்தினர் அறைக்கு வந்திருந்தனர்.

கோட்டாபய ராஜபக்ச, தொலைபேசி உரையாடலில், எரிபொருள் இறக்குமதியை எளிதாக்குவதற்கான கடன் உதவியை ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் தனிப்பட்ட முறையில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...