எரிவாயு கப்பல் நாட்டிற்கு வந்தடைந்தன: உடனடியாக விநியோகிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

Date:

எரிவாயு ஏற்றிச் சென்ற கப்பல் நாட்டிற்கு வந்தடைந்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3,740 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு இரண்டாவது கப்பல் நாளை (ஜூலை 11) மாலை இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் இன்று பிற்பகல் 3 மணிக்கு கெரவலப்பிட்டியை வந்தடைந்தவுடன் எரிவாயுவை இறக்கி விநியோகிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் 3,200 மெற்றிக் தொன் எரிவாயுவுடன் மூன்றாவது கப்பல் ஜூலை 15 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதுடன், இம்மாதத்திற்கான ஆர்டர் செய்யப்பட்ட எரிவாயுவின் அளவு 33,000 மெட்ரிக் தொன் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜூலை 12ஆம் திகதி முதல் எரிவாயு விநியோகம் வழமையாகவும் முறையாகவும் இடம்பெறும் எனவும், இம்மாத இறுதிக்குள் உள்நாட்டு எரிவாயு தேவை தொடர்பான பிரச்சினை முற்றாக தவிர்க்கப்படும் எனவும்  லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...