எரிவாயு கப்பல் நாட்டிற்கு வந்தடைந்தன: உடனடியாக விநியோகிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

Date:

எரிவாயு ஏற்றிச் சென்ற கப்பல் நாட்டிற்கு வந்தடைந்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3,740 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு இரண்டாவது கப்பல் நாளை (ஜூலை 11) மாலை இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் இன்று பிற்பகல் 3 மணிக்கு கெரவலப்பிட்டியை வந்தடைந்தவுடன் எரிவாயுவை இறக்கி விநியோகிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் 3,200 மெற்றிக் தொன் எரிவாயுவுடன் மூன்றாவது கப்பல் ஜூலை 15 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதுடன், இம்மாதத்திற்கான ஆர்டர் செய்யப்பட்ட எரிவாயுவின் அளவு 33,000 மெட்ரிக் தொன் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜூலை 12ஆம் திகதி முதல் எரிவாயு விநியோகம் வழமையாகவும் முறையாகவும் இடம்பெறும் எனவும், இம்மாத இறுதிக்குள் உள்நாட்டு எரிவாயு தேவை தொடர்பான பிரச்சினை முற்றாக தவிர்க்கப்படும் எனவும்  லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மன்னார், இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பாதிக்கப்பட்ட 157 பேரை கடற்படையினர் மீட்டனர்

மன்னாரின் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட...

GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை...

வென்னப்புவவில் உயிரிழந்த விமானி தொடர்பில் இலங்கை விமானப்படை இரங்கல்

வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட போது உயிரிழந்த...

சீரற்ற வானிலையால் சந்தையில் மரக்கறிகளின் விலை உயர்வு!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை கணிசமாக அதிகரித்துள்ளன. ஒரு...